scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label MY SCHOOL. Show all posts
Showing posts with label MY SCHOOL. Show all posts

September 08, 2013

மாவட்ட அளவிலான செஸ் போட்டி பள்ளி மாணவ, மாணவியர் அசத்தல்(எங்கள் பள்ளி மாணவர் மூன்றாமிடம் பெற்றார்)

திருப்பூர்:பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி, திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது.

முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி, போட்டியை துவக்கி வைத்தார். திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு, அவிநாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை ஆகிய ஆறு குறு மையங்களுக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 276 மாணவ, மாணவியர் விளையாடினர். வயது அடிப்படையில், 11, 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் என நான்கு பிரிவுகளாக, போட்டி நடத்தப்பட்டது.

September 03, 2013

DR.RADHAKRISHNAN AWARD WINNER-CONGRATULATIONS...

MY SCHOOL HEADMASTER MR.S.KALIAPPAN M.A.,M.Ed.,M.Phill., HM,P.U.MIDDLE SCHOOL, SUNDAKKAMPALAYAM,UTHUKULLI UNION,TIRUPUR DT.

WON DR.RADHAKRISHNAN AWARD FOR GOOD TEACHER.
CONGRATULATIONS SIR......

ஆசிரியர்குடும்பம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

August 31, 2013

ஊத்துக்குளி ஒன்றிய அளவிலான சதுரங்கப் போட்டி-அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்.



ஊத்துக்குளி ஒன்றிய அளவிலான சதுரங்கப்போட்டி 11 வயதுக்கு கீழ் மற்றும் 14 வயதுக்கு கீழ் என இரு பிரிவுகளாக ஊத்துக்குளி இரயிலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் ஊத்துக்குளி ஒன்றிய திருமண மண்டபத்திலும் இன்று 31.08.2013 காலை 10 மணிக்கு தொடங்கியது.இதில் ஊத்துக்குளி ஒன்றியத்தை சேர்ந்த 80 பள்ளிகளிலிருந்து 340 மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர். சதுரங்கப்போட்டியினை ஊத்துக்குளி ஒன்றியப் பெருந்தலைவர் திரு.C.D.ரவிச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி.ஆ.பூங்கோதை, கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி.பி.முஸ்ராக்பேகம்,சுண்டக்காம்பாளையம் பள்ளி தலைமையாசிரியர் திரு.சு.காளியப்பன் மற்றும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியை திரு.வாரணவாசி,திரு.தண்டபானி ஆகியோர் நடுவர்களாக இருந்து நடத்தினர். எங்கள் பள்ளி மாணவர் க.தினேஷ் மற்றும் க.பிரியதர்ஷினி ஆகியோர் ஒன்றிய அளவில் முதலிடம் பெற்றனர். இதில் வெற்றி பெற்ற அனைவரும் எதிர்வரும் 07.09.2013 அன்று கல்விமாவட்ட அளவில் விளையாட உள்ளனர். இவர்கள் அனைவரையும் ஆசிரியர்குடும்பம் பாராட்டுகிறது.
11 வயதுக்கு கீழ் (ஆண்கள்) வெற்றி பெற்றோர்:
தரம்
மாணவர் பெயர்
பள்ளி
I
க.தினேஷ்
ஊ.ஒ.ந.பள்ளி,சுண்டக்காம்பாளையம்
II
க.மனோஜ்
ஊ.ஒ.ந.பள்ளி,கஸ்தூரிபாளையம்
III
அ.சுபாஷ்
ஊ.ஒ.தொ.பள்ளி,சரவணபுரம்
11 வயதுக்கு கீழ் (பெண்கள்) வெற்றி பெற்றோர்:
தரம்
மாணவர் பெயர்
பள்ளி
I
க.பிரியதர்ஷினி
ஊ.ஒ.ந.பள்ளி,சுண்டக்காம்பாளையம்
II
வே.ஹேமாபாரதி
ஊ.ஒ.தொ.பள்ளி,பூலாங்குலம்
III
அ.தேவதர்ஷினி
கொங்கு மெட்ரிக் பள்ளி,ஊத்துக்குளி
14 வயதுக்கு கீழ் (ஆண்கள்) வெற்றி பெற்றோர்:
தரம்
மாணவர் பெயர்
பள்ளி
I
மு.திவாகரன்
ஊ.ஒ.ந.பள்ளி,கருமஞ்சிரை
II
து.பிரசாந்த்
ஊ.ஒ.ந.பள்ளி,ஊத்துக்குளி இரயிலடி
III
ர.ஞானமூர்த்தி
ஊ.ஒ.ந.பள்ளி,16-வேலம்பாளையம்
14 வயதுக்கு கீழ் (பெண்கள்) வெற்றி பெற்றோர்:
தரம்
மாணவர் பெயர்
பள்ளி
I
அ.ரேணுகா
ஊ.ஒ.ந.பள்ளி,கோவிந்தம்பாளையம்
II
ர.பிரியா
ஊ.ஒ.ந.பள்ளி,கோவிந்தம்பாளையம்
III
சு.ஜோதிமணி
ஊ.ஒ.ந.பள்ளி,கஸ்தூரிபாளையம்

August 23, 2013

சிந்தனைத்திறனை வளர்க்கும் சதுரங்கப்போட்டி.

தமிழக முதல்விரின் ஆணைப்படி மாணவர்களின் சிந்தனைத்திறனை வளர்க்கும் விதமாக தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி அளவிலான சதுரங்கப்போட்டி நடைபெற்றது.திருப்பூர் மாவட்டம்,ஊத்துக்குளி ஒன்றியம்,சுண்டக்காம்பாளையம்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் 19 மாணவர்கள் கலந்துகொண்டனர்.அதன் புகைப்படங்களில் சில..




July 29, 2013

ஜூனியர் ரெட்கிராஸ் துவக்க விழா

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம்,சுண்டக்காம்பாளையம்,ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் ஜூனியர் ரெட்கிராஸ் துவக்க விழா நடைபெற்றது.ஊத்துக்குளி கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி.பி.முஸ்ராக் பேகம் M.Sc.,M.Ed., அவர்கள் தொடங்கி வைத்தார்.ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் திரு.பெ.ஜார்ஜ் அவர்கள் ரெட்கிராஸ் பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் விளக்கம் தந்தார்.முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் திரு.சு.காளியப்பன் அவர்கள் வரவேற்புரை நல்கினார்.விழாவில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவ மாணவியர்கள்,கல்விக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.