scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

April 11, 2014

திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 10,126 அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு வாக்குப்பதிவு 15-ந் தேதி நடக்கிறது

திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடு படும் 10,126 அரசு ஊழி யர்களுக்கு தபால் ஓட்டு வாக்குப்பதிவு 15-ந் தேதி நடக்கிறது என்று கலெக்டர் ஜி.கோவிந்த ராஜ் தெரிவித்தார்.ஆலோசனை கூட்டம்திருப்பூர் மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் வேட் பாளர்கள் ஆலோசனை கூட் டத்தை தொடர்ந்து கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை யில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-திருப்பூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 79 ஆயிரத்து 993 பேர், பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 60 ஆயிரத்து 748 பேர், திருநங்கை வாக்காளர் கள் 107 பேர் என்று மொத்தம் 19 லட்சத்து 40 ஆயிரத்து 848 வாக்காளர்கள் உள்ளனர். இதுதவிர 312 பேர் சர்வீஸ் வாக்காளர்கள் உள்ளனர்.வாக்காளர் சீட்டுவாக்காளர்களுக்கு 19-ந் தேதிக்குள் வாக்காளர் சீட்டு கொடுக்க வாக்குச்சாவடி அதி காரிகளுக்கு உத்தரவிட்டுள் ளோம். இதுதவிர வாக்குப் பதிவு நாள் அன்று வாக்குச் சாவடி மையம் அருகில் உதவிமையம் அமைக்கப்பட்டு விடுபட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டு வழங்க ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடக்கும். திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் தயார் நிலையில் உள்ளது. இந்த தேர்தலில் மாவட்டத்தில் 10,126 பேர் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ளனர். தபால் ஓட்டுப்பதிவுஇவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முடிந்து விட்டது. அடுத்தகட்ட பயிற்சி வருகிற 15-ந் தேதி நடக்கிறது. அன்று காலை பயிற்சியும், மாலையில் அரசியல் கட்சியினர் முன் னிலையில் தபால் ஓட்டுப்பதிவும் நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும், தபால் ஓட்டுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தெரிவித் தார்.

No comments:

Post a Comment