கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும்தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக் கிய பானம் நீராகாரம். முதல் நாள் இரவில் 2 பிடி சோற் றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிடவேண்டும். உச்சிப் பொழுதில் பச்சை நிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக் குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா…! எழுதும் போதே நாவில் உமிழ் நீர் அருவியாக சுரக்கின்றதே.இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவ ளை பருகினால் என்ன நிகழும்? ஒரு பழமொழி பதில் சொல்கிற து.
ஆற்றுநீர் வாதம் போக்கும் !
அருவிநீர் பித்தம் போக்கும் !!
சோற்றுநீர் இரண்டையும் போக்கும் !!!
ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான் சோற் றுநீர். இதனால் வாத நோய்களான பக்க வாதம் கைகால் அசதி, முடக்கு வாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப் புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக் கும். அத்துடன் கோடைக் கால பாதிப்புகளான வயிற்று வலி, சரு மத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க் குரு, தேக அனல் ஆகியன வராது காக்கு ம். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல் நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச். டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்று நீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக் கால பெருமை!

No comments:
Post a Comment