Pages

June 27, 2014

அண்ணா பல்கலைக்கழக பொதுப்பிரிவினருக்கான பி.இ., கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கவுன்சிலிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நாளை துவங்குவதாக இருந்த பொதுப்பிரிவினருக்கான பி.இ., கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. புதிய இன்ஜினியரிங் கல்லூரிகளை துவங்க, ஏ.ஐ.சி.டி.இ., சுப்ரீம் கோர்ட்டில் கால அவகாசம் கோரியிருந்தது. வரும் ஜூலை 3ம் தேதி வரை ஏ.ஐ.சி.டி.இ.,க்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment