Pages

December 12, 2013

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/2013, மாபெறும் வெற்றி ! வெற்றி! தீர்ப்பு நகல் 17.12.13 அன்று வழங்கப்படும்


  அதிசய நாள் 11.12.13. இடைநிலை ஆசிரியர் துன்பம் நீங்க  
ஆணை கிடைத்த நாள். நேற்று
நமது வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் court no.11.case no 10. விசாரணைக்கு வந்தது . நீதிபதி .சுப்பையா அவர்கள் விசாரித்தார் .நமக்கு இரு ஊதிய குழுவிலும் ஊதியம் சட்ட விரோதமாக மறுக்கப்பட்டு உள்ளது என்பதை நமது வழக்கறிஞர் திரு . அஜ்மல்கான் அவர்கள் கூறி வாதிட்டார் அரசு வழக்கறிஞர் காலம் வேண்டும் என்றார் .நமது வழக்கறிஞர் காலம் முன்று வருடம் ஊதிய குழு எடுத்து கொண்டு மறுத்து உள்ளது.எனவே வழங்கக் கூடாது .நோட்டிஸ் வழங்க கூடாது .ஆணை தான் வேண்டும் என வாதிட்டார் 


  நீதிபதி சுப்பையா அவர்கள் ஏற்றுக் கொண்டார்.அரசு TATA சங்கம் கூர்றுவது பொய் என்றால் 17.12.13 க்கு முன்பாக தெரிவிக்கலாம் . அல்லது இடை நிலை ஆசிரியர்க்கு 9300+4200 வழ்ங்க வேண்டும்.இதை எட்டு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என  நீதிபதி .சுப்பையா அவர்கள் உத்தரவிட்டார் . மேலும் 17.12.13 அன்று உத்தரவு நகல் வழங்கப்படும் என்று கூறினார்.
தகவல்: TATA பொதுச் செயலாளர் அவர்கள்.

1 comment:

  1. பொது செயலாளர் அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள். இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசால் கொத்தடிமைகளாகிவிட்டோமோ என்று நினைத்த வேளையில் நல்ல தீர்ப்பை வாங்கி தந்த உங்களுக்கு நன்றிகள்

    ReplyDelete